நாகப்பட்டினம் மாவட்டம் காவிரியின் கடைமடைப் பகுதியாகும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வருவதென்பது அரிது தான். காரணம், ஆண்டுக்கணக்கில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் கிடக்கின்றன. நீர்த் திறப்பு மதகுகள் சீரற்றுக் கிடக்கின்றன.